விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பெரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 64). இவர் கடந்த 4 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தமிழ்ச்செல்வன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com