பெரும்பாலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பெரும்பாலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

ஏரியூர்

பெரும்பாலை அருகே உள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னா கவுண்டர் (வயது 75). இந்நிலையில் கடந்த வாரம், சின்னாகவுண்டர் வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கை உடைந்து படுகாயம் அடைந்தார். இதற்காக கட்டு போட்டு சிகிச்சையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கை வலி தாங்காமல் அவதிக்குள்ளான முதியவர் விஷம் குடித்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com