சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர் - சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம்

சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம் அடைந்தார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர் - சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம்
Published on

பூந்தமல்லி, பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கைலட்சுமி (வயது 84). இவர், தன்னுடைய மகள் ராணி (61) மற்றும் தம்பி கூத்து என்ற குமரகுரு (72) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குமரகுரு வீட்டில் இருந்த சுத்தியலால் தனது சகோதரி மங்கைலட்சுமி மற்றும் அவருடைய மகள் ராணி ஆகிய இருவரின் தலையிலும் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கினர்.

அவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன குமரகுரு, சுவரில் தனது தலையை முட்டிக்கொண்டார். இதில் காயம் அடைந்த அவரும் மயங்கி விழுந்தார். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சொத்து தகராறில் தனது சகோதரி மற்றும் அவருடைய மகளை குமரகுரு சுத்தியலால் தாக்கியது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com