அரசு பஸ் மோதி முதியவர் பலி

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
அரசு பஸ் மோதி முதியவர் பலி
Published on

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 80). நேற்று முன்தினம் இவர், தனது மகளை பார்ப்பதற்காக கொண்டமநாயக்கன்பட்டிக்கு வந்தார். பின்னர் மகளை பாத்துவிட்டு தேனி-மதுரை நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பாது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com