மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
Published on

தனியார் தொழிற்சாலை

திருச்சி கல்கண்டார்கோட்டை ஆனந்தம் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் விராலிமலை அருகே உள்ள வேலூர் ஊராட்சியில் இயங்கிவரும் வால்வு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக சரவணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

எலக்ட்ரீசியன் பலி

இதனை கண்ட சக தொழிலாளர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சரவணன் மனைவி கவுரி அளித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com