நெல்லை, தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்


நெல்லை, தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்
x

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் இன்று முதல் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் கோட்டங்களில் செயற்பொறியாளர் அலுவலகங்களில் இன்று முதல் பின்வருமாறு மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.

அதன்படி இன்று (1.7.2025) முதலாவது செவ்வாய்கிழமை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 4.7.2025 முதலாவது வெள்ளிக்கிழமை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11.7.2025 இரண்டாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15.7.2025 மூன்றாவது செவ்வாய்கிழமை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18.7.2025 மூன்றாவது வெள்ளிக்கிழமை தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22.7.2025 நான்காவது செவ்வாய்கிழமை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25.7.2025 நான்காவது வெள்ளிக்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story