சரக்கு ரெயிலில் சிக்கி ஊழியர் படுகாயம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பணியின்போது சரக்கு ரெயிலில் சிக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார். ரெயில்வே ஊழியர்
சரக்கு ரெயிலில் சிக்கி ஊழியர் படுகாயம்
Published on

சூரமங்கலம்

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது 59). சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பாயிண்ட் மேனாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஜங்ஷன் ரெயில் நிலைய கூட்ஷெட் யார்டு பகுதியில் என்ஜின்கள் திரும்பி வர உதவியாக பாயிண்ட் மாற்றும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக 7-வது தண்டவாள பாதையில் நின்ற சரக்கு ரெயிலின் பின்புறம் பாயிண்ட் மாற்றும் பணியை செய்தார். அப்போது திடீரென அவரது வலதுகால் சரக்கு ரெயிலின் கம்பியில் சிக்கி கொண்டது,

சிகிச்சை

அப்போது ரெயில் புறப்பட்டதால் அவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com