தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தர்மபுரி ஏமக்குட்டியூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

தர்மபுரி ஏமக்குட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). தனியார் நிறுவன ஊழியரான இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com