திருக்காம்புலியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருக்காம்புலியூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
திருக்காம்புலியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Published on

கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com