ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

கோவளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
Published on

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராஜு. இவருடைய மகன் சோபித் வர்மா (வயது 17). இவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடல்சார் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

சோபித் வர்மா, தனது கல்லூரி நண்பர்களுடன் கோவளம் கடற்கரையில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி சோபித் வர்மா உள்பட அவருடன் சென்ற நண்பர்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக உடன் சென்ற 4 நண்பர்களும் பத்திரமாக கரை திரும்பினர். ஆனால் சோபித் வர்மா மட்டும் கடலுக்குள் மாயமானார். அவரது உடலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நீலாங்கரை கடற்கரையில் சோபித் வர்மா உடல் கரை ஒதுங்கியது. நீலாங்கரை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com