தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் புதிதாக சேர்ந்த 9.3 லட்சம் உறுப்பினர்கள்

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர்.
தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் புதிதாக சேர்ந்த 9.3 லட்சம் உறுப்பினர்கள்
Published on

புதுடெல்லி,

நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்கள், அவர்களது எதிர்கால சமூக பாதுகாப்புக்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) சந்தாதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள்.

அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் இ.பி.எப்.ஓ. அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் விவரத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிதாக சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 0.48 சதவீதம் அதிகம். மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும், தொழிலாளர் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கூறியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்ட ஆகஸ்ட் 2024 க்கான தற்காலிக ஊதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024-ல் 18.53 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை இருந்தது என்றும், இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 9.07 சதவீதத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவித்தது.

மேலும் இதில் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் அதிகம். இதன்படி ஆகஸ்ட் 2024 இல் மொத்த புதிய உறுப்பினர் சேர்க்கைகளில் குறிப்பிடத்தக்க 59.26 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்பது தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கூடுதலாக, ஆகஸ்ட் 2024க்கான 18-25 வயதினருக்கான நிகர ஊதியத் தரவு 8.06 லட்சமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com