மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது.
மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
Published on

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாநில வளர்ச்சியில் காவலரின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், காவலரின் பணிகள் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியை பள்ளியின் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தேவகோட்டை தாலுகா சார்பு ஆய்வாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். வரலாறு பட்டதாரி ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக செயல்பட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com