மானாமதுரை அருகே உள்ள தீயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45).முன்னாள் ராணுவ வீரர். இவர் எவ்வித உரிமமும் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.