ஈரோட்டில் பரபரப்புகட்டிட தாழிலாளி அடித்து கொலை?

ஈரோட்டில் கட்டிட தாழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா?என போலீசா விசாரணை நடத்தி வருகிறாகள்.
ஈரோட்டில் பரபரப்புகட்டிட தாழிலாளி அடித்து கொலை?
Published on

ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). கட்டிட தாழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சூரம்பட்டி வலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்றார்.

அங்கு மது குடித்தபோது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபாலகிருஷ்ணனை மது போதையில் அவரது நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு இறந்த கோபாலகிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கோபாலகிருஷ்ணன் தவறி விழுந்ததில் உயிரிழந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com