

சென்னை,
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர கால நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும், தொழில்நுட்ப கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றுக்கான முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதுவரை 16 ஆயிரத்து 940 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
இதற்கு விண்ணப்பிக்க நேற்று (4-ந்தேதி) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று, இணையதள விண்ணப்பப்பதிவு வருகிற 20-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.