கடல் நீர்மட்டம் தாழ்வு: குமரியில் 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.
கடல் நீர்மட்டம் தாழ்வு: குமரியில் 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க இருந்தது. அப்போது திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதையடுத்து படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர் காலை 10 மணிக்கு கடலில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். தொடர்ந்து 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com