காட்டுமன்னார்கோவிலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

காட்டுமன்னார்கோவிலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டா.
காட்டுமன்னார்கோவிலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் திருமூலஸ்தானத்தை சேர்ந்தவர் வேணு (வயது 58). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் தினந்தோறும் குடித்து விட்டு வருவது வழக்கம். நேற்று முன்தினம் அவர் குடிப்பதற்கு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த வேணு, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேணு பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் கபிலன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com