

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 19.2.2026 அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ‘முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.