நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி

நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி
Published on

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் மாதத்தில் 22-வது நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முஸ்லிம் சுன்னத் ஜமாத் தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலைமை தாங்கினார். முன்னாள் இக்பால் சேவா சங்க தலைவர் ஏர்வாடி சாகுல் ஹமீது, ஜமாத்தின் நிர்வாகிகள் அப்பியான் ஹிதாயத்துல்லாஹ், சீனி நசுருதீன், ரிஸ்வான், சிட்டி ஜபருல்லாகான் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனார்.

இதையொட்டி பள்ளிவாசல் கட்டிட வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும், குழந்தைகளுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com