தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அந்த விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் கலெக்டரை வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும். அதில் விண்ணப்பம் செய்பவரின் சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com