வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரக்கொலை

செங்கோட்டையில் வீட்டில் தனியாக வசித்த பெண் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் மர்மநபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரக்கொலை
Published on

செங்கோட்டை:

செங்கோட்டையில் வீட்டில் தனியாக வசித்த பெண் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் மர்மநபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியாக வசித்த பெண்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 43 வயதான ஒரு பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இ்ந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உணவு அளித்து வந்தனர்.

ரத்த காயங்களுடன் பிணம்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண் தனது வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். அவரது தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலை?

அங்கு பெண்ணின் உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவரது உடலில் ரத்தக்காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் மர்மநபர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

பரபரப்பு

அந்த பெண்ணின் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அவர் தனியாக வசித்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

செங்கோட்டையில் தனியாக வசித்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com