நெய்வேலி என்.எல்.சி.யில் தீ விபத்து..!

நெய்வேலி என்.எல்.சி.யில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
நெய்வேலி என்.எல்.சி.யில் தீ விபத்து..!
Published on

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

இந்த நிலையில், நெய்வேலி என்.என்.சி 2-வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் எம்.டி.சி எனும் இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீப்பிடித்து எரிவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீ விபத்து பற்றி என்.எல்.சி. நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com