

விருதுநகர்,
சுற்று சூழல் மாசுபடுகிறது என கூறி பட்டாசுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 24வது நாளாக தொடருகிறது.
சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து முற்றிலும் விலக்க அளிக்க கோரியும், பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகாசி அருகே திருத்தங்கலில் பட்டாசு தொழிலாளர்கள் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து உள்ளனர்.
#Firecrackers #Sivakasi