கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு

திருவாடானையில் நடந்த கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு
Published on

தொண்டி,

திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்க சுவாமி கோவில் திருவிழாவையொட்டி 11-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை திருவாடானை ஒன்றிய கவுன்சிலர் சாந்திசெங்கை ராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டிஜிட்டல் பிரபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் முதல் பரிசை பாசிபட்டினம் பாசிஅம்மன் அணியும், 2-வது பரிசை சிலுகவயல் அணியும், மூன்றாம் பரிசை ஆதியூர் அய்யனார் அணியும் 4-ம் பரிசை கானாட்டாங்குடி அணியும் பெற்றன. பரிசுகளை முதல் நிலை ஒப்பந்தக்காரர் மாவூர் இளங்கோ, யூனியன் தலைவர், துணைத்தலைவர் இளையான்குடி செல்வி பாண்டி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன், திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியாராமு ஆகியோர் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com