தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை

மது குடிக்க பணம் தராததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
Published on

கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம்-புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 51). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் ராமலிங்கத்துக்கு, குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமலிங்கம் வீட்டை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com