ஜூலை 3-ந்தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

ஜூலை 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
தூத்துக்குடி கலெக்டர் விஷு மகாஜன்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 3-ந் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 3-ந்தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்ட விஷு மகாஜன் தலைமையில் 2026 ஜூலை மாதம் வெள்ளிக்கிழமை, 3.7.2026 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் வைத்து காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பதிவு செய்த ஊர்த்தலைவர்கள் / மீனவ பிரதிநிதிகள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com