

அரக்கோணம்:
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அதிகப்படியான நீர் திறப்பால் ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை மீட்பு பணிகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து அதி நவீன மீட்பு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தலா 25 வீரர்கள் 3 குழுக்கள் மீட்பு படை வாகனத்தில் சென்றனர்.