முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் மாதம் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் அடைப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரூ .5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் மாதம் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com