அடிப்பெருக்கு விழா - முத்துமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

முத்துமலை முருகன் கோவிலில் அடிப்பெருக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அடிப்பெருக்கு விழா - முத்துமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவிலில் முருகன் சுவாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதன் பின்னர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான பால்குடம் ஏந்தி முருகன் கையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முத்துமலை முருகன் கோவிலில் திரண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com