

சென்னை,
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கஜா புயல் கரையை நெருங்கிய நிலையில் பெதுமக்கள் எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது? என்பது பற்றிய விரிவான அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
புயல் பற்றிய அரசின் அதிகாரபூர்வ செய்திகளை தொலைக்காட்சி, நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் தெரிந்து கெள்ள வேண்டும்.
வதந்திகளை நம்ப கூடாது. செல்பேன்களை அடிக்கடி சார்ஜ் செய்து வைத்துக்கெள்ள வேண்டும். முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பெருட்கள் ஆகியவற்றை வெள்ள நீர் புகாத இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கட்டி வைக்க கூடாது.
புயல் அடிக்க தெடங்கியவுடன் மின்சார இணைப்பை முற்றிலும் துண்டிக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். பள்ளமான, பாதுகாப்பற்ற இடத்தில் வீடு இருந்தால் பாதுகாப்பான வேறு இடத்திற்கு செல்ல வேண்டும்.
புயலின்பேது வெளியே இருக்க நேரிடும் பட்சத்தில் பாதுகாப்பான இடம் அருகில் இருக்கிறதா? என அறிந்து அங்கு செல்லவேண்டும். சேதமடைந்த கட்டிடங்கள், மரம், மின் கம்பங்கள் அருகில் நிற்க கூடாது.
சாலையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கிறதா? என்பதை கவனித்து அதன் பின்பே மேற்கெண்டு செல்ல வேண்டும். புயலின் பேது மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.