காந்தி ஜெயந்தி விழா

வாசுதேவநல்லூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
காந்தி ஜெயந்தி விழா
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் மார்க்கெட் பஜாரில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி சேவா சங்கம் சார்பில், மகாத்மா காந்தி ஜெயந்தி விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சேவா சங்க அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட இரு பெரும் தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சங்க தலைவர் கு.தவமணி, செயலாளர் குருசாமி பாண்டியன், துணைத்தலைவர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாகிகள் முத்துச்செல்வம், ஆறுமுகசாமி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com