காந்தி ஜெயந்தி விடுமுறை: நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிறுப்பதாவது:-

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை(திங்கட்கிழமை) சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com