கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திவாகர் (வயது 23), ரஞ்சித் (19), சந்துரு (25), அஜித்குமார் (24), ஹரிஷ் (20) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் ஒராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் திருச்சி மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டிடம் கலெக்டரின் உத்தரவு நகலை ஒப்படைத்தனர். பின்னர் திவாகர், ரஞ்சித், சந்துரு, அஜித்குமார், ஹரிஷ் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com