தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

கோவையில் திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

கோவை

கோவையில் திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண்

கோவை மாவட்டம் நீலாம்பூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 26). தொழிலாளி. இவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜீவஜெயந்தி (21) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பத்மநாபனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனை ஜீவஜெயந்தி கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜீவஜெயந்தி மனவேதனையுடன் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் ஜீவஜெயந்தி வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜீவஜெயந்திக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com