தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

மயிலாடுதுறை கூறைநாடு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சங்கீதா (வயது 35). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு 2019-ம் ஆண்டு சென்னை அயனாவரம் 2-வது தெரு அம்பேத்கர் நகரை சேர்ந்த சாமுவேல் (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக சங்கீதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் கணவர் சாமுவேல், சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சங்கீதா வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். மறுநாள் காலையில் சங்கீதா தூக்கில் தொங்குவதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கீதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com