செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்...!

செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கி விபத்துக்கு உள்ளானது.
செங்கம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்...!
Published on

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் நாகப்பாடி அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்துக்கு வழிவிடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சலையோர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com