திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
Published on

திருவெண்ணெய்நல்லூர் 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவெண்ணெய்நல்லூர் வட்டக் கிளையின் 2-வது பேரவை கூட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அன்பு முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சரவணன் வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி தேவி தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்படைப்பு ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் கேசவலு, வட்ட துணை செயலாளர் குமார், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் ரவி, செந்தில்முருகன், பழனிவேல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com