தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமேசுவரம் வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ராமேசுவரம் வந்தார். அவர் இன்று(சனிக்கிழமை) ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு செல்கிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமேசுவரம் வருகை
Published on

ராமேசுவரம், 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ராமேசுவரம் வந்தார். அவர் இன்று(சனிக்கிழமை) ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகை

ராமேசுவரம் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று விமானத்தில் மதுரை வந்தார்.விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஸ்சேகர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். கவர்னருடன் அவருடைய மனைவி லெட்சுமி மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

மாலையில் கவர்னரின் குடும்பத்தினர், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களை கோவில் துணை ஆணையர் அருணாசலம் வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் மற்றும் குடும்பத்தினர் ராமேசுவரம் புறப்பட்டனர். ராமநாதபுரம் சென்றடைந்த கவர்னரை, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அந்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ராமேசுவரம் சென்றடைந்தனர். அங்கு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.

இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கவர்னர் மற்றும் குடும்பத்தினர் ராமேசுவரம் கோவிலில் ஸ்படிக லிங்க தரிசன பூஜையில் கலந்துகொள்கின்றனர். அதன் பின்னர் கார் மூலம் தனுஷ்கோடி சென்று அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிடுகிறார்கள்.

பாலீஸ் பாதுகாப்பு

பின்னர் அப்துல்கலாம் நினைவிடத்தில் கவர்னர் மரியாதை செலுத்துகிறார். பின்னர் கார் மூலமாக மதுரை புறப்பட்டு வருகிறார்.

அங்கு இருந்து மதியம் 2 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராமேசுவரம் வருகையையொட்டி பஸ் நிலையம் முதல் கோவில் வரையிலான சாலை மற்றும் கோவில் வாசல், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com