அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர்- காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com