பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

இது குறித்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது. 1 ஆம் தேதியன்று உள்ள அப்போதைய சூழல் பொருத்து பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14 மாநிலங்களில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.சில இடங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் ,சில இடங்களில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதன்படி,முதல்நாளில் 20 மாணவர்கள்,மறுநாளில் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வரவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com