துப்பாக்கிகள், பிஸ்டல்களுக்கு பூஜை - சி.ஐ.எஸ்.எப் படையினர் கொண்டாடிய ஆயுத பூஜை

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வளாகத்தில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப் ) வளாகத்தில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

விஸ்வகர்மா ஜெயந்தியை ஒட்டி, பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைப்புகள் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி, மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டப்பட்டது. அப்போது, துப்பாக்கிகள், பிஸ்டல்கள் ஆகியவற்றை வைத்து பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com