தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
Published on

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் நிவேதா (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிவேதா தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com