புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்
புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்
Published on

வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள், கடைகளை பொதுமக்கள் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் குப்பைகளை தெருவில் கொட்டாமல் மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து நகராட்சி சார்பில் வாகனத்தில் வரும் தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும். குப்பைகளை எக்காரணத்தை கொண்டும் சாலைகளில் கொட்டக்கூடாது. டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த கூடாது. புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com