உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை

உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை
Published on

மதுரை,

உயர்நீதிமன்றங்களில் காலியான வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்தது.

அரசின் இந்த நியமன உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. திறமை, தகுதியை கருத்தில் கொள்ளாமல் ஆளும்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களே உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அரசு வழக்கறிஞர்களின் பணி அனுபவம் குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், மதுரை கிளை பதிவாளர் (நீதி) ஆகியோர் ஆய்வு செய்யவும், அரசு வழக்கறிஞர்களின் முன்நடத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமன அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதுபற்றிய விசாரணையில் நீதிபதிகள் இன்று, அரசின் இந்த நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஏற்கனவே நிறைவடைந்த அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com