வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சி
Published on

வேப்பனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை இல்லாமல் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இ்ந்த நிலையில் வேப்பனப்பள்ளி பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மதியம் 2 மணிக்கு திடீரென கருமேகம் திரண்டு லேசாக மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணிக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com