மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்ட கணவன்...!

ஆலங்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்ட கணவன்...!
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன் (வயது 36). இவருக்கும், வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி ராதா கோபித்து கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இளமுருகன் மனைவி ராதாவை சேர்ந்து வாழ் அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த இளமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com