முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜர் ஆனார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ. பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: - ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன்.

ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை எனக்கு சம்மன் அனுப்பியது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டுஎன்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com