வாணியம்பாடி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல்

வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக மண் கடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பறிமுதல்

சோதனையின் போது, உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் எடுத்து கடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜே.சி.பி. இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக மண் கடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com