19 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூல்

கடந்த 19 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூலானது.
19 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் வசூல்
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு, கிருத்திகை மற்றும் முகூர்த்த காலங்களில் பக்தர்கள் கூட்டம் முருகன் கோவிலில் அலைமோதியது.

இவ்வாறு திருத்தணிக்கை வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2 நாட்களாக திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது. இதற்கு கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 19 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரத்து 3 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 555 கிராம், வெள்ளி 8,862 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com