கூடலூரில் குடும்ப தகராறில் முதியவர் மண்டை உடைப்பு; மருமகன் கைது

கூடலூரில் குடும்ப தகராறில் முதியவர் மண்டையை உடைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்
கூடலூரில் குடும்ப தகராறில் முதியவர் மண்டை உடைப்பு; மருமகன் கைது
Published on

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 41). இவரது மனைவி சித்ரா. தமிழ்செல்வன் தற்போது தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தனது மாமனா வீட்டில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி சித்ரா கண்டித்தார். இதனால் கணவன், மனைவி இடைய தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாமனார் தண்டபாணி (80) தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் கம்பால் மாமனார் மற்றும் மனைவியை தாக்கினார். இதில் தண்டபாணி மண்டை உடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிந்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com